பிரதான செய்திகள்

தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை கூடுகிறது. மேற்கு வங்க மாநிலம் லால்கர் விவகாரமும் லிபரான் கமிஷன் அறிக்கையும் புயலைக் கிளக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தேவையில்லை' என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பது மாநில சுயாட்சிக்கு ஏற்பட்ட களங்கம் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

விலை உயர்வு இன்று நள்ளிரவு (புதன்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன.

பங்குச் சந்தைகளில் காலையில் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. ஆனால் சில நிமிடங்களிலேயே குறைந்தது. காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 12, நிஃப்டி 7 புள்ளிகள் குறைந்தது. ஆசியாவில் இன்று காலை, சில பங்குச் சந்தைகளில் சாதகமாகவும், சிலவற்றில் பாதகமாகவும் இருந்தது.

ஏனைய செய்திகள்

இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பது உண்மை என்றாலும் அதற்காக சிங்களர்களின் கோபத்தை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேசியிருப்பது அதிர்ச்சி அளி‌க்‌கிறது எ‌ன்று பா.ம.க ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்த ராஜபக்சவுக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டும் என தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார்.

நாட்டின் மேற்குக் கடற்கரை பகுதிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக புலனாய்வு ஏஜென்ஸிகள் தகவல் அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இது ஒரு தகவல்தான். இதனால் பயங்கரவாதத் தாக்குதல் நடந்துவிடும் என்று அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார்.

மும்பையில் உள்ள வீட்டில், மனைவி சகீனா, மகன், மகளுடன் வசித்து வந்த தயிப் மேத்தா கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் உடல்நலக் குறைவால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அரசு இன்று மாறிவரும் பூகோள அரசியல் நிலைமையை தனக்கு சாதகமாக வைத்து அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக அந்த இராணுவப் போராட்டங்களை முறியடித்து விட்டது. எனவே அடுத்த கட்டமாக தமிழர்களின் போராட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசு என்ற வகையில் முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.

அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இல்லை எனில் வரலாறு காணாத போராட்டத்தை அரசாங்கம் சந்திக்க வேண்டியிருக்கும்" எனவும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தமர அமில தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஓர் அரசு அமைய வேண்டும். எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு 'தமிழர் அரசை' அமைக்கும் நிலை உருவாகலாம்" என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு இன்றி இதனை நடைமுறைப்படுத்த முடியாது என நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, நாட்டு மக்களின் சம்மதத்துடனேயே இந்த சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள 'த அவுஸ்திரேலியன்', புல்மோட்டையில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்களே அதிகாரிகளால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது.

விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் 2ஆம் நிலையில் உள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 8ஆம் நிலையில் உள்ள பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை 6- 2, 6- 3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
Result Pages  1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13 

வீடீயோ செய்திகள்
Last posted Videos
SunNews Tamil
Evening News - 7/2/2009
SunNews Tamil
TamilTV News - 7/2/2009
SunNews Tamil
Tamil News - 7/1/2009
SunNews Tamil
Tamil News - 6/30/2009

More Video News >>


சிறப்புச் செய்திகள்

Search
:

© The Service rights to www.tamilr.com